
நெடுந்தீவு கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த கடற்றொழிலாளரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த மரியவேதநாயகம் அமரலமேயன் என்பவரது குடும்பத்தினருக்கே இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் இன்று(28) மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிஸ்னன் குறித்த இழப்பீட்டுக்கான காசோலையை அனர்த்தத்தில் உயிரிழந்த அமரலமேயனின் தந்தையிடம் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.