நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

நாடளாவிய ரீதியில் இன்று பொது போக்குவரத்து சேவை வழமையான நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் 50 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி சேவையிலிருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி பல்வேறு தொழில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த 24 மணித்தியால அடையாள பணி புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *