பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: தம்பதி உட்பட மூவர் உயிரிழப்பு!

பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிடியவில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 70 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் அவரது 62 வயது மனைவியும் 72 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்லும்போது பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *