வட அயர்லாந்திற்கு சுமார் 100 இராணுவ மருத்துவர்களை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க உதவி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக வட அயர்லாந்திற்கு சுமார் 100 இராணுவ மருத்துவர்களை அனுப்ப பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஃபாஸ்ட் நகர மருத்துவமனை மற்றும் டன்டோனால்டில் உள்ள அல்ஸ்டர் மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள். மூன்றாவது மருத்துவமனையும் உதவி பெறலாம்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மருத்துவர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த பணியாளர்கள் செப்டம்பர் 29ஆம் திகதி முதல் வடக்கு அயர்லாந்திற்கு வந்து ஒக்டோபர் 4ஆம் திகதி வேலையைத் தொடங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

இராணுவம், ரோயல் கடற்படை மற்றும் ரோயல் விமானப்படை ஆகியவை நெருக்கடி தொடங்கியதில் இருந்து பிரித்தானியா முழுவதும் உதவ ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *