பிரதமர் பதவி விலகுவாரா? இல்லையா? வெளியானது புதிய தகவல்

பிரதமர் பதவியிலிருந்து விலகி, அரசியலமைப்பையும், பாராளுமன்றத்தையும், நாட்டையும் அராஜக பாதைக்கு கொண்டு செல்ல தயாரில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தை அடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, பதவி விலக தீர்மானித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும்,பிரதமர் பதவியிலிருந்து தான் விலக போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *