சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை கையளிக்க வந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்! எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதனை இன்று சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை கையளிக்க வந்த 13 பேர் வாயிற்படிக்கு அருகில் வந்தபோது அங்கு சென்று அந்த கடிதத்தை சபாநாயகரின் ஊடகச்செயலாளர் பெற்றுள்ளார்.

இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த 13 பேரும் கைதுசெய்யப்பட்டு மஹரகம மற்றும் வெலிக்கடை பொலிஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரித்து இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிடவேண்டும் என்று சம்பிக்க ரணவக்கவும் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *