முல்லைத்தீவில் திருமலை நபர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்ற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடற்றொழில் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *