நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்!

மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இன்று பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *