கடல்புலிகள் பயன்படுத்திய காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட கட்டடம்

செங்கலடி – களுவன்கேணியில் ஆள் நடமாட்டம் இல்லாத காணிபகுதி ஒன்றிற்குள், அத்துமீறி கட்டடம் கட்டப்பட்டு வருவதாக, செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளது.

அதன்படி, குறித்த கடற்கரை மீனவர்களின் முறைப்பாட்டிற்கு அமைய சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்பவ இடத்திற்கு நான் சென்றிருந்தேன்.

அந்த வகையில் குறிந்த காணியானது தமிழர்களின் பூர்விக காணியாகும்.

அக்காணியில் முன்னாள் கடல்புலிகள் பயன்படுத்திய சிறு தடுப்பு முகாமொன்று இருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், குறித்த இடத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டடமொன்று கட்டப்படுகின்றது.

பல பனை மரங்கள், சவுக்கு, தாளம் போன்றவை அனுமதியின்றி அகற்றப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த கட்டடம் கட்டுவதற்கு மணல் தோணாக்களில் இருந்து தோண்டப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக அக்கிராம உத்தியோகத்தர் உதவியை நாடி குறித்த காணியின் உரிமையாளர் என சொல்லப்படும் அகமட்டை வர சொல்லியும் அவர் வர மறுத்தமையால், பெரும்பான்மை சிங்கள இனத்தவரையும் அத்தோடு வேலையாட்களையும் காணியைவிட்டு வெளியேற்றிவிட்டு வந்தோம்.

எனினும், உரிய சட்ட நடவடிக்கைகள் கிராம சேவகரினால் தொடர்ந்தும் மேற்கொள்ப்படுகின்றது.

இது தொடர்பில் கடல் கரையோர பாதுகாப்பு அதிகாரசபை அவதானம் எடுக்க வேண்டும்.

மேலும், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, மீண்டும் ஒர் ஒமடியமடு தளம், பாலமுனை தளம் போன்ற சஹரான்கள் உருவாகாமல் தடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *