2012ஆம் ஆண்டில் இலங்கையில் பல மில்லியன் டாலர் பெறுமதியான வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கான ஒப்பந்தம் அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இப்போது இந்த ஒப்பந்தம் உயர்மட்ட பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக ABC ஊடகம் அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்ட 900 படுக்கைகள் கொண்ட இந்த வைத்தியசாலையை நேரடியாக சென்று தனது ஊடக ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் டச் நிறுவனமான EN கான்ட்ராக்ட்ஸ் நிறுவனத்தினால் அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு உப ஒப்பந்தக்காரராக வழங்கப்பட்டிருந்தது. அதாவது அஸ்பென் மெடிக்கல்ஸ் எனும் ஆஸ்திரேலியா நிறுவனம் இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் நிதி உதவிக்கு பொறுப்பாக உத்தரவாதம் வழங்கியிருந்தது.
இதன் படி, ஒப்பந்தக்காரர்களிற்கும் பிரதான நிறுவனத்திற்கும் இடையே அஸ்பென் மெடிக்கல்ஸ் நிறுவனம் இடைத்தரகராக பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என்பது ஏற்பாடு.
அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் andrew walker குறிப்பிடும் போது, இது தொடர்பாக தனக்கு தெளிவாக விடயங்கள் ஞாபகம் இல்லை என கூறியுள்ளார். குறிப்பாக அஸ்பென் நிறுவனம் இலங்கையில் கட்டுமான பணிக்காக ஊழியர்களை அனுப்பியதா எனக் கேட்டதற்கு இல்லை என பதிலளித்துள்ளார். அஸ்பென் நிறுவனம் நேரடியாக கட்டுமான பணிகளில் ஈடுபடவில்லை என்பது இவரது கருத்து.
இவர் தனக்கென ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முற்பட்டபோது முதல் முறையாக பிரச்சினை வெளிவந்துள்ளது. இதன் போது இவரது வங்கி, அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்துடன் இவரிற்கு உள்ள தொடர்புகள் குறித்து சில கேள்விகளிற்கு பதிலளிக்க வேண்டும் என இவற்றிற்கு கட்டளை ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த விசாரணையின்போது அஸ்பென் நிறுவனம் இலங்கையில் ஊழல் வழக்கு உடன் தொடர்புபட்டுள்ளதாக இவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளிற்கு ஏற்ப, நிறுவனம் இலங்கையில் வைத்தியசாலையை அமைப்பதற்கு தேவையான நிதி வழங்குவதற்கு இடைத்தரகு நிறுவனமாக மாத்திரமே செயற்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
நிறுவனம் இலங்கை அரசிடம் இருந்து பணத்தைப் பெற்று ஒப்பந்த காரர்களுக்கு அதை பிரித்து வழங்குவதை மாத்திரமே செய்துள்ளது. இதற்கு உரிய இடைத்தரகர் சேவைப் பணமாக பரிமாறிய தொகையின் நான்கு வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
Andrew walker இன் கருத்துப்படி, இதில் நடந்த மோசடி எதுவும் தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த விடயம் நடைபெற்ற போது அவர் நிறுவனத்தில் 50 வீத பங்குதாரராகவும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பட்டியலில் சில சந்தேகத்துக்குரிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக நிறுவனத்திலிருந்து அதிக தொகையான பணம் ஸபர் விஷன் எனும் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பிரித்தானியாவின் வெர்ஜின் தீவுகளில் உள்ளது.
இந்த நிறுவனத்திற்கு 1.4 மில்லியன் யூரோ பணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இப்போதைய பெறுமதிக்கு 2 மில்லியன் அவுஸ்திரேலியன் டொலர்கள். இந்த நிறுவனம் இலங்கையின் முன்னணி தொழிலதிபரான நிமல் பெரேராவின் பெயரில் இயங்கி வந்துள்ளது. உலகளாவிய ரீதியில் லஞ்சம் பெற்றது முதற்கொண்டு பல்வேறு விதமான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித செனரத்னே விடம் கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய பதில், நிமல் பெரேராவிற்கும் சுகாதாரத்துறை ஒப்பந்தங்கள்இற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். அவர் எந்த ஒரு முதலீட்டிலும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு நிமல் பெரேரா நெருங்கிய வங்கிப் பரிவர்த்தனைகளை முகாமைத்துவம் செய்யும் நபராக உள்ளார். 2016ஆம் ஆண்டு இவர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்சே கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் போது ராஜபக்சக்கள் சார்பில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை வங்கியில் இருந்து மீட்டதாக இவர் கூறியிருந்தார். அது முதல் இலங்கையில் நிதி தொடர்பான மோசடி குற்றங்கள் ஆணைக்குழு இந்த கொடுக்கல் வாங்கல்களை விசாரணை செய்து வருகிறது.
அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் நிமல் பெரேராவின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு செலுத்திய தொகைக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் ஏதேனும் சேவைகள் வழங்கப்பட்டுள்ளனவா எனும் கேள்விக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இலங்கையில் வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்த பணத்தொகை ராஜபக்சே குடும்பத்தின் சொந்த பணம் முகாமைத்துவம் செய்யும் நிமல் பெரேராவின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தெளிவாகப் புலனாகிறது.
இவ்வாறு கை மாற்றப்பட்ட பணத் தொகையை கொண்டு நிமல் பெரேரா கொழும்பில் ஒரு வீட்டு குடியிருப்பு கட்டடத்தை கொள்வனவு செய்துள்ளார். கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், அதே கட்டடத்தில் அடுத்து உள்ள அலுவலகத்தில் நாமல் ராஜபக்சவின் அனைத்துவதமான உத்தியோகபூர்வ நிதி நடவடிக்கைகளும் கையாளப்படுகின்றது.
இப்போது மீண்டும் நிமல் பெரேரா ராஜபக்ச குடும்பத்திற்காக வங்கி முகாமைத்துவம் செய்யும் நபராக இருக்கிறாரா எனும் கேள்வியை பொலிசாருக்கு எழுப்பியுள்ளது. அவ்வாறாக இருந்தால் இப்போது நிச்சயம் வைத்தியசாலை விவகாரத்தில் நிமல் பெரேராவும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது உறுதியாகும்.
இது தொடர்பாக நிமல் பெரேராவிடம் நேரடியாக கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில், “எந்த ஒரு காலத்திலும் நான் சுகாதாரத்துறையில் சேவையாற்றவில்லை. நான் நிதித் துறையிலும் உற்பத்தித் துறையிலும் சேவையாற்றி உள்ளேன்.
ஆனால் சுகாதாரத் துறையோ அல்லது மருந்துகள் இறக்குமதி செய்யும் விடயத்தில் தலையிடவில்லை என கூறியுள்ளார்.” ஆனால் வைத்தியசாலை ஒப்பந்தகாரர் ஒருவருக்கு பிரதான இடைத்தரகராக இருந்ததாக கூறியுள்ளார்.
அதேவேளை அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு தான் சேவையாற்ற வில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளார். முன்னர் கணக்கு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தவாறு, இரண்டு தடவைகள் அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் எதற்காக உங்களுக்கு பணம் செலுத்தியுள்ளது என்று கேட்கப்பட்டதற்கு அவ்வாறு நிறுவனம் பணம் செலுத்தவில்லை என ஆணித்தரமாக மறுத்துள்ளார்.
இவர் கூறும் கருத்துக்கள் யாவும் சிஐடி புலனாய்வு அறிக்கைகள் உடன் நேரடியாக முரண்படுகின்றன. மேலும் அவர் குறிப்பிடும்போது விர்ஜின் தீவில் உள்ள நிறுவனம், தான் வேலை செய்த நிறுவனம் என கூறியுள்ளார்.
ஆனால் விர்ஜின் தீவு வங்கி கணக்குகளின் படி நிறுவனத்தின் நேரடி பயனாளி நிமல் பெரேரா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே நிமல் பெரேரா பொலிஸாரிற்கு கூறியிருந்த தகவல்களில் இருந்து முற்று முழுதும் முரண்பாடாக இப்போது அவர் ஊடகவியலாளர்களுக்கு கூறியிருந்தார்.
இதனை மேலும் தெளிவாக ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.