பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் சற்றுமுன் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கை பதிவு செய்தார்.
அத்துடன் வாக்களித்த வாக்குச்சீட்டை எதிர் கட்சியினருக்கு காட்சிப்படுத்தினார்.
இந்நிலையில் ஆளுந்தரப்பு எதிர்ப்பினை வெளியிட்டதுடன் சபாநாயகரும் கண்டனம் தெரிவித்தார்.
இதேவேளை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.