சிங்கள வெகுஜனத்தினுடைய மனசாட்சியை தட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்! ஐங்கரநேசன்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது,

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இதுவரையும் எந்த ஒரு அரசாங்கமும் இவ்வளவு பாரிய நெருக்கடிகளை தனது அரசுக்கு எதிரான ஒரு மக்கள் பிரச்சனைகளை இப்பொழுதுள்ள அரசாங்கம் எதிர்கொள்வது போல எதிர்கொள்ளவில்லை.

அதே போன்று சுதந்திரமடைந்தற்கு பிறகு பொருளாதார ரீதியான மிகப் பெரும் சீர்குலைவு இப்போதுள்ளபோது இதற்கு முன்பு ஏற்படுவது இல்லை.

சிங்கள மக்கள் கோட்டா கோ கம போராட்டம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழ் மக்களின் பங்குபற்றல் மன ரீதியாக ஒத்ததாக இல்லை என்பது தான் எங்களுடைய கருத்து.

பொருளாதார நெருக்கடியின் மூலகாரணம் யுத்தம் என்றால் அதன் பின்னர் இருந்த சிங்கள பேரினவாதமும் இதற்கான காரணம்.

இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத போராட்டமாக பார்க்காமல் ராஜபக்ச சகோதரர்களுடைய குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்றவற்றையே முன்வைத்து வருகின்றார்கள்.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் தினம் வருகின்றது. இது போராளிகளை நினைவுகூரும் தினம் இல்லை. போரில் கொல்லப்பட்ட அனைத்து பொது மக்கள் நினைவு கோரும் நாள் ஆகும்.

இதன் மூலம் சிங்கள சகோதரர்களே எமது இன்றைய வேண்டுகோள் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலிற்கு வருவீர்கள் என்றால் உங்களுடைய நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக இதை நாம் கருதுவோம்.

மேலும் நாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்கள் தன் எழுச்சியாக காலி முகத்திடலின் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள்.

தமிழ் மக்களின் போராட்டம் ஆனது நியாயமானது குறைந்த பட்சம் அதிகார பகிர்வுக்கேனும் அவர்களினுடைய தன் ஆட்சி அதிகாரங்களை அவர்களிடம் கொடுப்பதற்கு நாங்கள் முன்வரவேண்டும் என்ற எண்ணக்கருவாவது முதலில் வரவேண்டும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சக்தியோ/ வலுவோ கிடையாது.

ஆனால் சிங்கள வெகுஜனத்தினுடைய மனசாட்சியை தட்டி எழுப்பும் ஒரு முழக்கமாக பறையாக உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *