நாளைய போராட்டத்திற்கு இலங்கை ஆசிரிய சேவை சங்கம் சார்பிலும் அழைப்பு

ஆசிரிய சேவை சங்கத்தின் பிரதிநிதி ஜெயராஜ் குலேந்திரன் வேல்வின் நாளைய தினம் நாடு தழுவிய கர்த்தால் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக பல போராட்ட்ங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நாளைய தினம் தொழிற்ச்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளனர்.

இதற்கு இலங்கை ஆசிரிய சேவை சங்கம் சார்பில் அழைப்பினை விடுக்கின்றோம்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ,கட்டட பொருட்களின் விலையேற்றம் ,பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் இன்மை போன்றவற்றால் நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் போராட்டங்களை நிகழ்த்தி அரசாங்கத்தை பதவி விலகச் சொல்லியும் ராஜபக்ஷ குடும்பத்தினர் இதுவரை பதவி விலகவில்லை.

எனவே இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆட்சியினை ஜனநாயக முறையில் மக்கள் தேர்தெடுக்க வேண்டியது என்பது நாட்டின் முழு மக்களின் பொறுப்பாகும்.

ஆகவே நாளைய தின போராட்டத்தில் அனைத்து நிறுவனங்கள் , ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச துறையினைச் சேர்ந்த அனைவரும் கறுப்பு நிற ஆடை அணிந்தும் ,கறுப்பு நிற கொடியுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *