நாளையதினம் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்று யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

