
சமூக ஊடகங்களில் எரிபொருள் தொடர்பில் பகிரப்பட்ட காணொளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோலின் தரம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களின் குருநாகல் பிராந்திய அதிகாரிகள் குருநாகல் நாரம்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.