சபாநாயகர்தான் “ஹொரு கோ கம”வின் தலைவர்! சபையில் அறிவித்த எதிர்கட்சி

நாடாளுமன்றத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ”ஹொரு கோ கம”வின் ( திருடர் போ கிராமம்) தலைவர் சபாநாயகர் என்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோஷா விதானகே இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் நாளாந்தம் கூடுகின்றபோதும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

இதனையடுத்து காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது தொடர்கிறது.

அத்துடன் நேற்று நாடாளுமன்றுக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் ஹொரு கோ கம என்ற கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றில் உள்ளவர்கள் அனைவருக்கும் எதிராக அமைக்கப்பட்டுள்ள கிராமமாகும்.

இந்தநிலையில் வெட்கத்துடன் அல்லது விருப்பத்துடனோ ஹொரு கோ கமவின் தலைவராக சபாநாயகர் இருப்பதாக ஹேஷா விதானகே குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *