அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமொன்று இன்று (06) வவுனியா மூன்றுமுறிப்பில் இடம்பெற்றது.
வவுனியா மூன்றுமுறிப்பு கிராம மக்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதியின் ஒருவழிப்பதையினை மறித்து குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது விடுதலைப்புலிகளின் டொலர் எங்கே, எங்கள் பணத்தை எங்களிற்கு தாருங்கள், நாங்கள் கேட்பது சாப்பிடுவதற்கு ஆனால் கிடைப்பது உங்களுக்கு, கோ கோம் கோட்டா போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.




