கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மரத்துடன் மோதி விபத்து!

முறிகண்டி செல்வபுரம் பகுதி A-9 வீதியில் பயணித்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவர் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ஜீப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள மரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் விபத்தில் வர்த்தக நிலையமொன்றும் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அனுமதியற்ற கட்டடங்கள் காணப்படுவதால் அடிக்கடி உயிர் ஆபத்தான விபத்துக்கள் ஏற்படுகின்றது.

இது தொடர்பில் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *