ஒருநாள் கூலியில் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு நடத்த முடியவில்லை! மேசன் தொழிலாளர்கள் கவலை

தமது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக மேசன் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தற்பொழுது சீமெந்தின் விலை 2700 தொடக்கம் 3,000 ரூபாய் வரையில் விற்பனை செய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கட்டுமான பணிக்கு தேவையான இதர பொருட்களும் பல மடங்கு அதிகரித்த விலை காரணமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்ட வேலைகளையும் நிறைவு செய்ய முடியாத நிலையில், அதற்கான பணத்தையும் தமது சொந்தப் பணத்திலேயே செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ஒரு நாள் கூலியாக 2000 ரூபா பணத்தையே பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தொகையில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பல வேலைகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், விலை அதிகரித்ததன் காரணமாக பலருக்கு கட்டுமான பணிகளை இடைநடுவே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *