ஜனாதிபதி செயலக முன்றலில் விநோதமான முறையில் ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இன்றுடன் 28 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை நேற்றையதினம் நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் பிற்பாடும் ஆங்காங்கே அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இன்றையதினம் கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று மாலை முதல் ஜனாதிபதி செயலக பாதுகாப்பு வேலிகளில் பெண்கள் அணியும் மார்பு கச்சைகளினை தொங்கவிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *