கொழும்பு,மே 07
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள் விதிவிலக்கான, விகிதாசார மற்றும் நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால் அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அவசரநிலை அல்ல. கருத்து வேறுபாடுக்கான மூல காரணங்களைச் சமாளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
