தமிழக அகதி முகாமில் உயிரிழந்த இலங்கை தமிழர்

மனைவி இறந்த துக்கத்தில் பரமத்தி அகதி முகாமைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தமிழகம் – நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் 43 வயது நகுலேஷ்வரன் என்ற கூலித்தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி ஜான்சி (வயது 38). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மனைவி இறந்ததில் இருந்து நகுலேஷ்வரன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகுலேஷ்வரன் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அப் பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது நகுலேஷ்வரன் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பரமத்தி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *