அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு

இலங்கைத் தீவில் எழுந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதற்குத் தீர்வு வேண்டி கடந்த ஒருமாத காலமாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவந்த கட்சி சார்பற்ற அமைதிவழிப் போராட்டத்தின் மீது நேற்றைய தினம் திங்கட்கிழமை காடையர்களை திட்டமிட்ட ரீதியில் ஏவி நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களாகிய நாங்கள் இவ்வாறான நிலைமைகளை கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் என்றவகையில் உங்கள் வலிகளை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.

வன்முறை மற்றும் ஒடுக்கு முறை சார்ந்து, பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் அபாயகரமான முறைமையை இல்லாது செய்ய அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும் என கோரி நிற்கின்றோம்.- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *