இலங்கையில் குடிசார் யுத்தம் ஏற்படும் சாத்தியம்! – வெளியான எச்சரிக்கைத் தகவல்

நாட்டில் குடிசார் யுத்தமொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகாத பட்சத்திலேயே இதற்கு சாத்தியம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *