
கொள்ளையடித்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டாம் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை கிழக்கு கடற்படை தளத்திற்கு முன்னால் நேற்றையதினம்(10) இடம் பெற்ற மக்கள் போராட்டத்தின் போதே இவ்வாறு கடற் படை தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர் அமைதியாக இருந்த திருகோணமலை மண்ணை இந்த ராஜபக்ச குடும்பம் இங்கு தஞ்சம் புகுந்துள்ளன.
நீதியை சட்டத்தை சீர் குழைத்த ராஜபக்ச கொள்ளைகார குடும்பத்தை இங்கு இருப்பதற்கு அனுமதிக்க முடியாது கொள்ளையடித்த பணத்தை மக்கள் சொத்தை திருப்பி கொடுத்து விட்டு அனுப்புங்கள் என இந்த மேல் நீதிமன்ற கட்டிட தொகுதியை பார்த்து கூறுகிறேன்.
ராஜபக்ச குடும்பத்தை ஒப்படையுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இல்லா விட்டால் அனுப்பி விடுங்கள் கொள்ளையடித்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டாம் என்றார்.