யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இன்று பகல்வேளையில் 11 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நாவாந்துறை பகுதியில் இன்று பகல் 12.30 மணியளவில் வீட்டார் சமையல் வேலை மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் பிறிதொரு வாசல் கதவு ஊடாக உள்நுழைந்த ஒர் இளைஞன், அலுமாரியில் இருந்த 11 பவுண் தங்க நகைகளை களவாடியதோடு வீட்டினுள் இருந்த 40 ஆயிரம் ரூபா பெறுமதியிலான கைத் தொலைபேசி ஒன்றையும. களவாடிச் சென்றுள்ளான்.
இவ்வாறு இடம்பெற்ற துணிகரத் திருட்டானது சில நிமிடங்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.