ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என பல தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் உரை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.