
தனுஷ்கோடி அருகே 50 கிலோ எடை கொண்ட அரிய வகை ஆமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரம் தீவு பகுதிகளான மண்டபம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் பசு, டால்பின், அரிய வகை ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் 50 கிலோ எடை கொண்ட அரிய வகையான பெருந்தலை ஆமை இறந்த நிலையில், கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், அதனை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.