
தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அனைத்து சேவைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தன.
இந்நிலையிலே, அனைத்து சேவைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்படுமென தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, துறைமுகங்கள், சுகாதாரம், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், தபால், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தமது சேவைகளை வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.