கோட்டா கோ கமவின் மக்கள் அழுத்தம் தொடர வேண்டும்-மாநகர சபை உறுப்பினர் கோரிக்கை!

கோட்டா கோ கமவின் மக்கள் அழுத்தம் தொடர வேண்டும் என மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

அந்த நாற்காலியில் யார் பிரதமராக அமர்ந்தாலும், 9/5 அன்று வன்முறையைத் தூண்டிய SLPP குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். #GotaGoGama இன் மக்கள் அழுத்தம் தொடர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *