ரணிலின் ஆட்டம் ஆரம்பம்;சஜித்தின் முகாமும் காலியாகும் நிலை!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்ப நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்குள்ளும் புகுந்த குழப்பவாதிகளால் அசாதாரண நிலை உருவாகியுள்ளதுடன் அரச தரப்பினரின் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பொலீஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டது. இதேவேளை பிரதமர் பதவியிலிந்து விலகுவதாக மகிந்த ராஜபக்சவும் அறிவித்தார்.

இவ்வாறாக அமைச்சரவையும் பிரதமரது இராஜினாமாவோடு கலைந்ததுடன் இதனால் அரசியல் ஸ்திரத்தன்மையற்று விளங்குகிறது.

இவ்வாறான நிலையில் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் எழத் தொடங்கியதும் புதிய பிரதமர் தொடர்பில் எதிர்தரப்புக்களும் தமக்கிடையே பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியினரின் ஆதரவாளர்களும் ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவாகும் பட்சத்தில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றையதினம் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக தெரவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *