
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் அவரால் அவரது வீட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஒழிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். அதேபோன்று தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையிலிருந்தும் வெளிவருவதற்கே மக்கள் விரும்புகின்றனர்.
இவை இரண்டும் அல்லாது ராஜபக்ஷர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிலிருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அல்ல.
தற்போதைய ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்படும் இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது வெற்றியளிக்காது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.