பசிலுக்கு எதிரான அரச நிதி முறைக்கேடு வழக்கு: நாளை வெளியாகவுள்ள தீர்மானம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக அரச நிதி முறைக்கேடு தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்கு விசாரணைகளை தொடர்வதா இல்லையா? என்பது தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றம் நாளை தீர்மானத்தை அளிக்கவுள்ளது.

தொம்பே – மல்வானை – மாபிடிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை, பிரமாண்டமான வீடு மற்றும் நீச்சல் தடாகம் ஒன்றை நிர்மாணித்தமை, பண்ணை ஒன்றை நடத்தியமை மற்றும் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *