கோட்டா தலைமையிலான அரசாங்கத்தில் பங்குதாரர்களாக முடியாது! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

எதற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் நாம் பங்குதாரர்களாக ஆக முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று எதிர்க்கட்சிகளின் பிரதான நிலைப்பாடும் அதுவே.

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 17ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *