பிரதமர் பதவியை ஏற்க விருப்பம்! ஜனாதிபதிக்கு சஜித் அவசர கடிதம்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற் கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்றக் குழுவுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் பின்வருமாறு:

ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் பதவியில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொள்ள வேண்டும்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும்.

SJB முன்வைத்த அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுங்கள்

நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் வழமைக்குட்படுத்தப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட பின்னர் முறையான அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் பொதுத் தேர்தலை நடத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *