எம்மீதான அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார்! நாமல் அதிரடி

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவில்,

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.

எனது தந்தைக்கோ, எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை.

தம் மீதான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயார்.

அத்துடன், அனைத்து குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *