நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு தேசிய அரசாங்கமே சிறந்த தீர்வாக அமையும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்
இன்று (12) ந் திகதி அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில்,
பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க தாமதமாதல் நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியல் ஸ்திரத் தன்மையையும் மேலும் மோசமான நிலைமைக்கே இட்டுச்செல்லும்.
அரசியற் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களை புறந்தள்ளி விட்டுக்கொடுப்புக்களோடு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.
அமையப் பெறுகின்ற தேசிய அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமை, மற்றும் மக்களினதும் போராட்டக் காரர்களினதும் எதிர்பார்ப்புகள் என்பவற்றை கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் மோசடியாக சூறையாடப்பட்ட அனைத்து பணத்தையும் சொத்துக்களையும் மீட்டு நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குசேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.