
கோட்டபாய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் 36வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நாளுக்கு நாள் காலிமுகத்திடல் அர்ப்பாட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.
அதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களம் கோட்டா கம என பெயரிடப்பட்டு அங்கிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோட்டா கோ கமவில் நூலகம் நடமாடும் மின்உற்பத்தி நிலையம் வைத்தியசாலை வசதி சட்ட உதவி மையம் குளியல் அறை என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியவாறாக கோட்டா கோ கம காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு கோட்டா கோ கமவில் ‘டிர்காஸ் சினிமா’ பொது மக்களுக்காக திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.