
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக மகிந்த அரசில் இருந்து விலகிய 10 கட்சிகளின் சுயேட்சைக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிங்கள வானொலி ஒன்றுக்கு சுயேட்சைக் குழுவின் உறுப்பினரான வீரசுமண வீரசிங்க கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“எந்தவொரு சலுகைகளையும் பெறாமல் நாட்டின் சார்பாக பிரதமரின் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.