
கொழும்பு, மே 13
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இன்று (13) காலை அவர் பிரசன்னமாகியுள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.