ஞாயிறன்று பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 பேர் கொண்ட அமைச்சரவையில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறுவருக்கு அமைச்சர் பதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுயாதீன அணிகள் மற்றும் எதிரணிகளில் உள்ள உறுப்பினர்கள் சிலரும் அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளனர். இதற்கான பேச்சுகள் தற்போது இடம்பெறுகின்றன.

இதேவேளை, சிறுபான்மையினர் நால்வருக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *