யாழில் வாடகைக்கு தங்கியுள்ள பல்கலை மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகத்தினரால் நேற்றைய தினம் இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விளையாட்டு கழகத்தினர் தாமாகவே முன்வந்து அவசர உதவியை வழங்கியதையிட்டு அரியாலை கில்லாடி விளையாட்டு கழகத்தின் தலைவர் கவிந்தனிற்கு பல்கலை மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டவேளையில் யாழ். பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

இவ் அத்தியாவசிய உதவியானது, புலம்பெயர் தேசத்தவர்களான கீதன் சர்மிளா குடும்பம் மற்றும் சசிகரன் ஜீவிதா குடும்பத்தால் வழங்கப்பட்ட பணத்தில் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்திலும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *