
நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
எனினும் மீண்டும் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்பதால் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு சனிக்கிழமை (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.