நாமல் வெளியிட்டுள்ள வர்த்தமானி: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை ரக்பியை (SLR) தற்காலிகமாக இடைநிறுத்தி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகளை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார்.

இவ்வாறு இடைநிறுத்தி அவர் வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *