
ஜனாதிபதி கோட்டாபய பதவியிலிருந்து விலக வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில்,புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது குறித்து என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டா கோ ஹோம் என்பது மக்களின் நிலைப்பாடு:ரணிலின் நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையில் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் வெளியிட்டிருந்தார்.
கோட்டா கோ ஹோம் என்ற போராட்ட கோஷத்துடனேயே பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தகவல் அனுப்பி இருந்தார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றாரா என்பது எங்களுக்கு தெரியாது.
எனினும் முழு நாட்டு மக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற போராட்ட கோஷத்துடன் இருக்கின்றனர் எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.