ரணிலின் பதவியேற்பு பிழையானது – மூத்த அரசியல்வாதி தெரிவிப்பு!

மக்களை அடக்கு நினைத்தால் என்ன ஆகும் என்று மக்கள் நிரூபித்து விட்டனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ .ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றின் ,முதல் தடவையாக நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு போராடுகின்றனர்.ஆனால் அது அடக்கப்படட முறை பிழையானது .

மக்களின் பொருளாதார நெருக்கடியினால் மற்றும் கஷ்டத்தினால் மட்டுமே இந்த போராட்டம் இடம்பெற்றது.
உலக நாடுகளே கேள்வியெழுப்பக்கூடிய நிலையில் இந்த போராட்டம் நிகழ்ந்தது .

எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனையாகவே காணப்படுகின்றது .இதனை எப்படி மீட்க முடியும்?.
ரணிலின் இந்த பதவியேற்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . பதவி கொடுத்த விதம் பிழை.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வந்ததாக தெரியவில்லை .

இரண்டுபேர் சேர்ந்து எடுத்த முடிவாகத்தான் தெரிகின்றது. இந்த பதவி ஏற்றலை உலக நாடுகளும் ஏற்காது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *