
அல்லைப்பிட்டி 5ஆம் வட்டாரத்தில் தனிமையில் இருந்த மூதாட்டியை அச்சுறுத்தி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் 1 இலட்சம் ரூபா பணம் என்பன நேற்று மதியம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற மூவர் சிங்கள மொழியில் பேசி மூதாட்டியை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.