யாழ் மந்திகையில் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!(படங்கள் இணைப்பு)

யாழ் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை  பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் மக்கள் மிக மிக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மூன்று தினங்களாக  எரிபொருள் இல்லாத நிலையில் இன்றைய தினம் எரிபொருள் வந்திறங்கி விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த சற்று நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் தற்போது விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக 300க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுடனும்  ஆயிரத்துக்கு மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்களுடனும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்க்கு காத்திருக்கின்றனர்.

ஆனால் மொத்தமாக 6 ஆயிரத்து 600 லிட்டர் பெட்ரோல் மட்டுமே எரிபொருள் நிலையம் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *