குருநாகலில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகல்,மே 22

குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மாவத்தகம காவல்துறை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *