பரீட்சைக்கு செல்வோருக்கு கிளிநொச்சியில் விசேட எரிபொருள் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாளையதினம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடமையில் ஈடுப்படவுள்ளவர்களுக்கும்இ பரீட்சாத்தியின் பெற்றோருக்கும் விசேடமாக எரிபொருள் விநியோகம் இன்றும் ( ஞாயிறு) நாளை திங்கள் கிழமையும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரீட்சை கடமைகளுக்கான எரிபொருள் விநியோகித்தல் நாளை(23) தொடக்கம் நடைபெறவுள்ள க/பொ/த சாதாரணதர பரீட்சைக்கான கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம், கரைச்சி தெற்குபலநோக்கு கூட்டுறவு சங்கம், கிளிநொச்சி.பூநகரி பலநோக்கு கூட்டுறவுசங்கம், பூநகரி, சாந்தரூபன் எரிபொருள் நிலையம், இயக்கச்சி, பளை, ஆகியஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிப்பட்டு வருகிறது.

எனவே, குறிப்பிடப்பட்ட கடமைகளுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ள தங்களது.சிபாரிசுடன் உத்தியோகத்தர்கள் பட்டியலை வாகன விபரத்துடன் உடனடியாக அனுப்பி வைக்குமாறு கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்விபணிப்பாளர்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையினை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *